கேரள நிலச்சரிவு: 6 மாத குழந்தையின் உடல் கண்டெடுப்பு

​கேரள நிலச்சரிவிலிருந்து 6 மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
​கேரள நிலச்சரிவிலிருந்து 6 மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. (கோப்புப்படம்)
​கேரள நிலச்சரிவிலிருந்து 6 மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. (கோப்புப்படம்)


கேரள நிலச்சரிவிலிருந்து 6 மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேவுள்ள ராஜமாலா பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அந்தப் பகுதியிலிருந்த தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். இதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) 42 ஆனது. இந்த நிலையில், தற்போது 6 மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com