விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இடுக்கியில் கன மழை: ஏலக்காய் தோட்டங்கள் சேதம்

இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் 813.30 ஹெக்டேர் பரப்பளவில் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியும், செடிகள் முறிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளன.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2020, 7:32 am

DIN

இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் 813.30 ஹெக்டேர் பரப்பளவில் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியும், செடிகள் முறிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளன.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியாறு, பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் ஆகிய வட்டாரங்களில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளே அதிகளவில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இடுக்கி மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்த கன மழையில் பல்வேறு இடங்களில் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியும், சூறைக் காற்றில் சிக்கி செடிகள் உடைந்தும் சேதமடைந்துள்ளன. 

தற்போது ஏலக்காய் தோட்டங்களில் அறுவடை பருவம் தொடங்கியுள்ள நிலையில், செடிகள் முறிந்து மண்ணில் புதைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இ-பாஸ் கட்டுப்பாடுகளால் ஏலக்காய் தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிடவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் முடியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர்.

சேத மதிப்பு: இடுக்கி மாவட்டத்தில் கன மழையால் 813.30 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.127.45 கோடி மதிப்பில் ஏலக்காய் பயிர்களும், 233.8 ஹெக்டேர் பரப்பளவில் 8.21 கோடி மதிப்பில் மிளகு கொடிகளும், 4 லட்சம் வாழை மரங்கள் மற்றும் 981 தென்னை மரங்களும் சேதமடைந்துள்ளது என்றும், 17,320 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.