மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உத்தரகண்டில் கனமழையால் நிலச்சரிவு: சாலைகள் சேதம்

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

News image

Landslide in Uttarakhand's Chamoli after heavy rain, several shops damaged

Updated On :11 ஆகஸ்ட் 2020, 11:20 am

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலியில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

சாமோலி மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள கடைகள் அனைத்தும் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. 

நிலச்சரிவினால் நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் வேறொடு சாய்ந்துள்ள நிலையில், மின்கம்பங்களும் சாலையில் விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு ஒருசில பகுதியில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.