கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழாக் கோலம் பூண்ட காவல்நிலையம்: பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

மகாராஷ்டிர மாநிலம் பல்தானாவில் உள்ள காவல்நிலையம் ஒன்று நேற்று விழாக் கோலம் பூண்டிருந்தது. காவலர்கள் பலரும் நேற்று காவல்நிலைய வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

News image
கோப்பு
Updated On :14 ஆகஸ்ட் 2020, 10:36 am

ANI

மகாராஷ்டிர மாநிலம் பல்தானாவில் உள்ள காவல்நிலையம் ஒன்று நேற்று விழாக் கோலம் பூண்டிருந்தது. காவலர்கள் பலரும் நேற்று காவல்நிலைய வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

கரோனா தொற்றால் நாடே சிக்கித் திணறிவரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சிக்லி காவல்நிலையத்தில் இந்த தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் காரணம் என்ன என்பது அப்பகுதி மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

இது பற்றி காவல்நிலைய அதிகாரி கூறுகையில், இப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதையே காவல்நிலையம் தரப்பில் தீபாவளியைப் போல கொண்டாடுகிறோம்.

அந்த சிறுமியை குற்றவாளிகள் மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்திருந்தனர். இன்று அதற்கு நீதி கிடைத்துள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.

நன்றி: ஏஎன்ஐ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.