கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரண்டு மாநிலங்கள் கைகோர்த்ததால், நுரையீரல் தானம் பெற்று மறுபிறவி எடுத்த இளைஞர்

கேஐஎம்எஸ் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு புணேவைச் சேர்ந்தவரின் நுரையீரல் பொருத்தப்பட்டு, மறுவாழ்வு கிடைத்துள்ளது.

News image
Lung patient gets new lease of life as two states join hands to save him
Updated On :18 ஆகஸ்ட் 2020, 11:00 am

DIN


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள கேஐஎம்எஸ் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு புணேவைச் சேர்ந்தவரின் நுரையீரல் பொருத்தப்பட்டு, மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கடந்த ஞாயிறன்று புணேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, மூளைச் சாவு அடைந்தததை அடுத்து, அவரது நுரையீரல், ஹைதராபாத்தில் உள்ள இளைஞருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

புணேவில் மூளைச் சாவு அடைந்தவரின் நுரையீரல், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத்துக்குக் கொண்டு வரப்பட்டது.  இதற்கு இரு மாநில போக்குவரத்துக் காவலர்கள், விமான நிலைய அதிகாரிகள், ஜீவன்தான் திட்டக் குழு உறுப்பினர்கள் என பலரும் ஒத்துழைப்பு அளித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் உடல் உறுப்பு தானத்தை செயல்படுத்தி வரும் ஜீவன்தான் திட்டத்தில், நுரையீரல் தானம் கேட்டு அந்த இளைஞர் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது புது வாழ்வு பெற்றுள்ளார்.

புணே தனியார் மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்தை அடையும் வழி மற்றும் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து கேஐஎம்எஸ் மருத்துவமனைக்கு வரும் சாலை முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, இரு மாநில போக்குவரத்துக் காவலர்களும் மிக விரைவாக செயல்பட்டு, தானமாகப் பெறப்பட்ட நுரையீரல் மருத்துவமனையைச் சென்றடையும் வகையில் பணியாற்றினர். இந்த சேவைக்கு இந்திய விமான நிலைய அதிகாரிகளும் உதவ முன் வந்தனர். 

இதனால், கேஐஎம்எஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வெற்றிகரமாக நுரையீரல் வந்தடைந்தது. உடனடியாக அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நுரையீரல் பொருத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.