கிரேட்டர் நொய்டா: உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவின் 148 ஆம் பிரிவில் நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் (என்.பி.சி.எல்) துணை மின்நிலையத்தில் புதன்கிழமை காலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.