கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆக்ராவில் கட்டட விபத்து: குழந்தை உள்பட மூவர் பலி

ஆக்ராவில் மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 மாத குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :20 ஆகஸ்ட் 2020, 9:37 am

DIN

ஆக்ராவில் மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 மாத குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

தில்லியின் ஆக்ராவில் உள்ள தோலிகர் பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உள்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 

இது குறித்து உடனடியாக தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும் குறுகிய சாலைகளால் மீட்பு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாததால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றது.

இதில் குழந்தை உள்பட மூன்று பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.