உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மும்பை காவல்துறையில் மேலும் ஒரு காவலர் கரோனாவுக்கு பலி

மும்பை காவல்துறையில் 35 வயதான துணை ஆய்வாளர் கரோனா வைரஸ் தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

Cop dies of COVID-19, toll in Mumbai Police force reaches 60 

Updated On :20 ஆகஸ்ட் 2020, 7:48 am

PTI

மும்பை காவல்துறையில் 35 வயதான துணை ஆய்வாளர் கரோனா வைரஸ் தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதன் மூலம் மும்பை காவல்துறையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தியோனர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இந்நிலையில் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

முன்னதாக, அதே காவல் நிலையத்தில் மேலும் ஒரு காவருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து வீடுதிரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.