தில்லியில் கடந்த 11 நாள்களில் 80% பருவமழை
தில்லியில் கடந்த 11 நாட்களில் இந்த ஆண்டுக்கு தேவையான 80 சதவிகித மழை பெய்துள்ளதாக நீர் தேக்கம் குறித்த நகர விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.எஸ்.புரி தெரிவித்துள்ளார்.


புதுதில்லி: தில்லியில் கடந்த 11 நாட்களில் இந்த ஆண்டுக்கு தேவையான 80 சதவிகித மழை பெய்துள்ளதாக நீர் தேக்கம் குறித்த நகர விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.எஸ்.புரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தில்லி நகரின் முக்கிய சாலைகள் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இன்று காலை முதல் தில்லி நகர சாலைகளில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனிடையே தில்லியில் கடந்த 11 நாட்களில் 80 சதவிகித மழை பெய்துள்ளதாக நகர விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.எஸ்.புரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, டெல்லி அரசு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிர்வாகங்கள் ஆண்டுதோறும் பருவமழையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மழையால் பிரச்சனைகளை சந்திக்கும் மக்களது இன்னல்களை அறிந்து அதனை போக்கமுடியும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...