மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உயர்சாதியினர் தோட்டத்தில் பூ பறித்த தலித் சிறுமி: குடும்பங்கள் ஒத்திவைக்கப்பட்ட கொடூரம்

ஒடிசா மாநிலத்தில் உயர்சாதியினர் தோட்டத்தில் பூக்களைப் பறித்த தலித் சிறுமியின் செயலுக்கு ஒட்டுமொத்த கிராமத்தையே ஒத்திவைத்த தீண்டாமை கொடூரம் அரங்கேறியுள்ளது.

News image
தீண்டாமைக்குள்ளான தலித் மக்கள்
Updated On :25 ஆகஸ்ட் 2020, 10:11 am

DIN

ஒடிசா மாநிலத்தில் உயர்சாதியினர் தோட்டத்தில் பூக்களைப் பறித்த தலித் சிறுமியின் செயலுக்கு ஒட்டுமொத்த தலித் குடும்பத்தினரை ஒத்திவைத்த தீண்டாமை கொடூரம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக தொடரும் சாதிக் கொடுமைக்கு மேலும் ஆதாரமாக சமீபத்திய நிகழ்வு ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. ஒடிசாவில் தெங்கனல் மாவட்டத்தின் கான்டியோ கட்டேனி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர்சாதியினரின் தோட்டத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்சாதியினர் அந்த சிறுமியையும் அவரது பெற்றோர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து நிர்பந்தித்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோரும்  கிராம பஞ்சாயத்திடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சியுள்ளனர்.இருந்தும் உயர்சாதியினர் அவர்களுக்கு தண்டனையாக, தலித் குடும்பங்கள் கிராம சடங்குகளில் பங்கேற்க தடை விதித்துள்ளனர். மேலும் கிராமத்தில் தலித் குடும்பத்தினர் யாருடனும் பேச அனுமதி மறுத்தும், அரசு ரேஷன் கடைகளில் இருந்து பொருள்களை வாங்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தலித் சமூகத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.