ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த நான்கு கைதிகள் வியாழக்கிழமை அதிகாலை தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா சிகிச்சை பெற்றுவரும் கைதிகள் நால்வரும் மருத்துவமனையில் இரண்டாவது கட்டடத்தில் உள்ள குளியலறையின் ஜன்னல் இரும்புக் கம்பியை அகற்றிவிட்டு, தப்பியோடி உள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுகின்றது. தப்பிச் சென்ற குற்றவாளிகளைக் கண்டறியச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் ஸ்கேன் செய்து வருகின்றனர். கடுமையான பாதுகாப்பு இருந்தபோதிலும் கைதிகள் எவ்வாறு தப்பிக்க முடிந்தது என்று மூத்த காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இரண்டு கைதிகள் சஞ்சல்குடா மத்திய சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் செர்லப்பள்ளி சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள். இவர்களில் ஒருவர் கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த சில நாள்களில் தொற்று பாதிக்கப்பட்ட 10 கைதிகளில் தப்பியோடிய நால்வரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


