தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது: பிரதமர் மோடி

சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image

சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On :28 ஆகஸ்ட் 2020, 11:33 am

புது தில்லி: சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டவர் அய்யன்காளி. வெள்ளியன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘சமூக சீர்திருத்தவாதி மகாத்மா அய்யன்காளி போன்றவர்களுக்கு தேசமே கடன்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கான அவரது உழைப்பு என்றுமே உத்வேகம் தரக் கூடியது. அவரது பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.