கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமூக வலைத்தளத்தைக் கண்காணிக்க தனிப்பிரிவை ஏற்படுத்தும் தில்லி காவல்துறை

புதுதில்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிடும் சமூகவலைத்தளப் பக்கங்களைக் கண்காணிக்க தில்லி காவல்துறை தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஆகஸ்ட் 2020, 12:39 pm

DIN

சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிடும் சமூகவலைத்தளப் பக்கங்களைக் கண்காணிக்க தில்லி காவல்துறை இணையத் தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான முறையில் சமூக வலைத்தளத்தில் பதிவிடுபவர்களை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள காவல்துறையின் இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாதம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு தகுதி வாய்ந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.