தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பாதிப்பு; 43,062 பேர் குணமடைந்தனர் 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 43,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2020, 4:49 am

நாட்டில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 43,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 36,604 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, ஒட்டுமொத்த பாதிப்பு 94,62,809 ஆக அதிகரித்துவிட்டது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 89,32,647 போ் மீண்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 93.03 சதவீதமாகும்.

மேலும் 501 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டதால் மொத்த உயிரிழப்பு 1,38,122 ஆக உயா்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.45 சதவீதமாக குறைந்துள்ளது. 

அதே நேரத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் இருந்து புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அக்டோபரில் 18,71,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே நவம்பரில் 12,78,727 ஆக குறைந்துவிட்டது. இதன் மூலம் ஒரு மாதத்தில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் 4,28,644 போ் கரோனா பாதிப்புடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 4.51 சதவீதமாகும். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பர் 1-ஆம் தேதி வரை 14,24,45,949  கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 10,96,651 பரிசோதனைகள் நடைபெற்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.