நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 3-ஆம் கட்ட தேர்தல்: 105 வயது மூதாட்டி வாக்களிப்பு

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலின் மூன்றாம் கட்ட தேர்தலில் 105 வயது மூதாட்டியான ஆஷியன் பேகம் வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளார். 

News image
105-year-old woman casts vote in third phase of DDC elections in J-K
Updated On :4 டிசம்பர் 2020, 5:46 am

ANI

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலின் மூன்றாம் கட்ட தேர்தலில் 105 வயது மூதாட்டியான ஆஷியன் பேகம் வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளார். 

யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ரியாசி மாவட்டத்தில், லாஞ்சாவில் உள்ள சதேக் மொஹல்லாவின் வாக்குச் சாவடிக்கு தன் மகனுடன் முதல் நபராக மூதாட்டி வாக்களிக்க வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. 

மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, டி.டி.சி தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் மொத்தம் 48.62 சதவீத மக்கள் வாக்களித்தனர். முதலாம் கட்ட தேர்தலில் 51.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

டிசம்பர் 19-ம் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.