ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தில்லியில் இன்று புதிதாக 3,419 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று புதிதாக 3,419 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :5 டிசம்பர் 2020, 3:48 pm

தில்லியில் இன்று புதிதாக 3,419 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று ஒரேநாளில் 81473 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 35352 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 46121 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவா்களில் 3,419 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,89,544 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் தலைநகரில் இன்று 77 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9574-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து இன்று 4916 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,53,292-ஆக உயா்ந்துள்ளது. 

தற்போது 26,678 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 16,231 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,385 படுக்கைகள் காலியாக உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 6045 இடங்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.