ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐந்தாம் கட்டப் பேச்சுவாா்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 3:20 am

DIN


புது தில்லி: வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் கட்டப் பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்படாததை அடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா் விவசாயிகள். பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.  

Story image

உலக அளவில் கவனம் பெற்றுள்ள விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு சனிக்கிழமை நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து வரும் 9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Story image

இதனிடையே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியுடன் விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டாலும், 8 ஆம் தேதி அழைப்புவிடுத்தபடி, நாடு தழுவிய போராட்டாம் நடைபெறும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.