நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் படுகாயம் (கோப்புப்படம்)
Updated On :9 டிசம்பர் 2020, 5:41 am

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகளின் கையெறி குண்டுகள் தவறுதலாக சாலையில் வெடித்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் வாகனங்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.