டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.

News image
குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 6:04 pm

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தில்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் தொடர்ந்து 14-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பரிந்துரைகளையும் நிராகரித்து மேலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர்.

தில்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சரத் பவார், டி.கே.எஸ்.இளங்கோவன்,  சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.