ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜனநாயகம் தரைமட்டமாக்கப்படுகிறது: மம்தா குற்றச்சாட்டு

மனித உரிமைகளை திரிணமூல் காங்கிரஸ் நிலைநாட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 டிசம்பர் 2020, 8:24 am

DIN


மனித உரிமைகளை திரிணமூல் காங்கிரஸ் நிலைநாட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் நாளையொட்டி சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''மேற்குவங்கத்தில் தனது ஆட்சி நடைபெற்ற கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் 19 மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு  1995-ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. 

இன்று மனித உரிமைகள் நாள். ஆனால் தற்காலத்தில் ஜனநாயகம் தரைமட்டமாக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகள் நொறுக்கப்படுகின்றன. மக்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. ஆனால் எனது அரசு மனித உரிமைகளை காக்க உறுதியேற்றுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.