புது தில்லி: நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 3.63 லட்சமாகக் (3,63,749) குறைந்தது. கடந்த 146 நாட்களில் இது மிகவும் குறைவான எண்ணிக்கை. இதற்கு முன் கடந்த ஜூலை 18ம் தேதி, சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,58,692ஆகக் குறைந்தது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்கள், மொத்த பாதிப்பில் 3.7 சதவீதமாக உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 37,528 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 8,544 குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 29,398 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்தை (92,90,834) நெருங்குகிறது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி இன்று 89,27,085ஆக உள்ளது. புதிய பாதிப்பைவிட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் வீதம் 94.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 414 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்: மருத்துவமனையில் அனுமதி!

புதுவையில் வாக்காளர்களைக் கவர்ந்த ரோபோ நிலா!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


