யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விவசாயிகளை சுரண்டுவதை பாஜக நிறுத்த வேண்டும்: அகிலேஷ்

நாட்டிற்கே உணவளிக்கு விவசாயிகளை சுரண்டுவதை பாஜக நிறுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News image
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்)
Updated On :11 டிசம்பர் 2020, 9:25 am

DIN


நாட்டிற்கே உணவளிக்கு விவசாயிகளை சுரண்டுவதை பாஜக நிறுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆளும் பாஜக அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது. நியாயமான கோரிக்கைகளுடன் சாலைகளில் போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக இதயமற்ற அணுகுமுறையை பாஜக மேற்கொள்கிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்திய ஜனநாயகத்தின் மீதான மதிப்பையே ஆளும் கட்சி சீர்குலைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கன்னூஜ் பகுதியில் கிஷான் யாத்திரையை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த திங்கள் கிழமை அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.