மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துக: மும்பையில் பாஜக பேரணி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்தி வரும் பாஜகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

News image
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் போராட்டம்
Updated On :11 டிசம்பர் 2020, 9:47 am

DIN

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்தி வரும் பாஜகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்கு வங்கத்தில் 2021 ஏப்ரல் - மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை அம்மாநிலத்திற்குச் சென்றார். வியாழக்கிழமை அவர் திரும்பும்போது அவரது வாகனம் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இந்தத் தாக்குதலில், குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்திய காரில் சென்ற ஜெ.பி.நட்டா பாதிப்பு இன்றி தப்பியபோதும், அவருடன் சென்ற பிற பாஜக தலைவா்களின் கார் கண்ணாடிகள் உடைந்ததோடு, சிலர் காயமும் அடைந்தனர்.

மேற்கு வங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெ.பி.நட்டாவின் கார் மீதான தாக்குதலுக்குக் காரணம் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி என பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். 

மேற்கு வங்க முதல்வரின் உருவ பொம்மையை எரித்தும், அவரது போஸ்டர்களில் கறுப்பு மை தேய்த்ததும், அவருக்கு எதிராக கோஷமிட்டும் சென்றனர். 

மேற்குவங்கத்தில் ஒரு கட்சியின் தலைவருக்கே பாதுகாபில்லாத நிலையில் ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரிடம், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக பாஜக எம்எல்ஏவும் செய்தித் தொடர்பாளருமான ராம் கதம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.