கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

டிசம்பர் 17-இல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட்

பி.எஸ்.எல்.வி-சி 50 சி.எம்.எஸ்-01 ராக்கெட்டானது சதீஷ்தவான் விண்வெளி ஆய்வ்ய் மையத்திலிருந்து டிசம்பர் 17ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வ்ய் மையம் அறிவித்துள்ளது.

News image
டிசம்பர் 17-இல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட்
Updated On :11 டிசம்பர் 2020, 1:50 pm

DIN

பி.எஸ்.எல்.வி-சி 50 சி.எம்.எஸ்-01 ராக்கெட்டானது சதீஷ்தவான் விண்வெளி ஆய்வ்ய் மையத்திலிருந்து டிசம்பர் 17ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வ்ய் மையம் அறிவித்துள்ளது.

தகவல்தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வி.-இன் 52 ஆவது ராக்கெட்டாகும்.

இந்தியாவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்-01 ஆனது தகவல்தொடர்பு மற்றும் நிலப்பரப்பு ஆய்வு ஆகியவற்றுக்காக செலுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வானிலை நிலைமைகள் தெளிவாக இருக்கும்பட்சத்தில் டிசம்பர் 17ஆம் தேதி மதியம் 3.41 மணியளவில் ராக்கெட்டானது விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.