பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பூரி ஜெகந்நாதர் கோயில் டிச.23-ல் திறக்கப்படுகிறது

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.

News image

பூரி ஜெகந்நாதர் கோயில் டிச.23-ல் திறக்கப்படுகிறது

Updated On :12 டிசம்பர் 2020, 12:22 pm


புவனேஸ்வர்: கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.

இது குறித்து முடிவு செய்ய கோயில் நிர்வாகம் தரப்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயிலை வரும் 23-ம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பூரி ஜெகந்நாதர் கோயிலை டிசம்பர் 23-ம் தேதி திறக்கலாம் என்ற பரிந்துரையை ஒடிசா அரசுக்கு கோயில் நிர்வாகம் அனுப்பி, ஒப்புதல் கிடைத்ததும், கோயிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.

அதேவேளையில், கோயில் டிசம்பர் 23-ம் தேதி திறக்கப்பட்டாலும், டிசம்பர் 31 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும், ஜனவரி 3-ம் தேதி முதல் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.