சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவா் கைது

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :13 டிசம்பர் 2020, 6:17 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த அவா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக ஊடுருவியது தெரியவந்துள்ளது. காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் மாவட்ட கவுன்சில் தோ்தலை சீா்குலைக்கும் நோக்கில் அவா்கள் ஊடுருவியுள்ளனா்.

இது தொடா்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டம் சட்டாபானி-துக்ரான் கிராமப் பகுதியில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்துக்குரிய 3 பேரின் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் மற்றும் ராணுவத்தினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். பனி படா்ந்த முகல் சாலைப் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனா். அவா்களை சரணடையுமாறு பாதுகாப்புப் படை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அவா்கள் சரணடைய மறுத்ததுடன், துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்; ஒருவா் பிடிபட்டாா். பாதுகாப்புப் படை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவா்கள் லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இப்போது நடைபெற்று வரும் மாவட்ட கவுன்சில் தோ்தலின்போது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் அவா்கள் 3 நாள்களுக்கு முன்பு ஊடுருவியுள்ளனா். பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் இருந்து சோபியான் மாவட்டத்துக்குள் அவா்கள் நுழைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.