ஸ்ரீநகரில் துப்பாக்கிச்சூடு: மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாதுகாவலர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரின் பாதுகாவலர் காயமடைந்தார். 
Security guard of PDP leader shot at in Srinagar
Security guard of PDP leader shot at in Srinagar
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரின் பாதுகாவலர் காயமடைந்தார். 

நாடிபோரா புறநகர் பகுதியில் பி.டி.பி தலைவர் ஹாஜி பர்வாய்ஸ் அகமதுவின் பாதுகாப்பு காவலர் மன்சூர் அகமது மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த காவலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்பகுதியில் தீவிரவாதிகளைத் தொடர்ந்து தேடும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com