தில்லியில் குறையும் கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம்

​தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 1.9 சதவிகிதமாக செவ்வாய்க்கிழமை பதிவானது. இதுவரை பதிவானதில் இதுவே குறைந்தபட்ச சதவிகிதம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 1.9 சதவிகிதமாக செவ்வாய்க்கிழமை பதிவானது. இதுவரை பதிவானதில் இதுவே குறைந்தபட்ச சதவிகிதம். 

கடந்த 24 மணி நேரத்தில் 85,105 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1,617 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது. 2,343 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த மாத தொடக்கதிலிருந்தே தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,10,447 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 10,115 ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் இதுவரை மொத்தம் 73,71,952 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நிலவரப்படி 15,247 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். இதுவே செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 14,480 ஆக குறைந்துள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com