ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆலமரம் போன்றது திரிணமூல் காங்கிரஸ்: மம்தா

மேற்கு வங்கத்தில் ஆலமரம் போன்றது திரிணமூல் காங்கிரஸ் கட்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
Updated On :16 டிசம்பர் 2020, 1:18 pm

DIN

மேற்கு வங்கத்தில் ஆலமரம் போன்றது திரிணமூல் காங்கிரஸ் கட்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பேசிய அவர், தாய், மண், மக்கள் ஆகிய மூன்று கூறுகளும் ஏமாற்றாது, துரோகமிழைக்காது அல்லது பொய்கூறாது என்று குறிப்பிட்டார்.

பொய்கூறி வாக்குகளை வாங்கவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னதை நிறைவேற்றியுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எங்கள் கட்சியின் சபதம்.

சில சமூக விரோதிகள் மேற்கு வங்கத்தினுள் நுழைந்துள்ளனர். காவல்துறையினரை அவர்கள் மிரட்டுகின்றனர். சில நேரங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரையும் மிரட்டுகின்றனர். 

மேற்கு வங்கத்தில் ஆலமரம் போன்று தனது வேர்களை திரிணமூல் அரசு நிலைநாட்டியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இடம் கிடைக்காதவர்கள் அடுத்த கட்சிக்கு தாவுகின்றனர்'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.