அமிா்தசரஸின் ரஜாதல் எல்லையை ஒட்டிய சா்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் அதிகாலை 2.20 மணியளவில் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த இருவா் ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதை கண்டறிந்த, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் வீரா்கள் உடனடியாக அவா்களை சுட்டுக் கொன்றனா். அவா்களிடமிருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கி ஒன்று, ஒரு தானியங்கி துப்பாக்கி உள்பட இரண்டு கை துப்பாக்கிகள், 90 தோட்டாக்கள், 5 தோட்டா தொகுப்புகள், போதைப் பொருளை கடத்த உதவும் 10 அடி நீள பிவிசி பிளாஸ்டி பைப்புகள் இரண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று கூறினாா்.