தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அயோத்தியில் ஜனவரி 26-ம் தேதி மசூதிக்கு அடிக்கல் 

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாளன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது. 

News image
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு
Updated On :17 டிசம்பர் 2020, 6:34 am

PTI


அயோத்தி: இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாளன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது. 

அயோத்தியில் அமைய உள்ள மசூதியின் மாதிரி வரைபடம் சனிக்கிழமை வெளியிடப்படும் என்று அதனைக் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட ஜனவரி 26-ம் தேதியன்று அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்நோக்கு மருத்துவமனை வளாகம், சமுதாய சமையல் கூடம், நூலகம் உள்ளிட்டவை அடங்கிய இந்த மசூதியின் மாதிரி வரைபடம் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த மசூதி வட்ட வடிவில், சுமார் 2000 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்பட உள்ளது என்று அறக்கட்டளையின் உறுப்பினர் அக்தர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.