ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஜம்முவில் மிகக் குளிரான இரவு; வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸாகப் பதிவு

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மிகவும் குளிரான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஜம்முவில் இந்த ஆண்டின் மிகவும் குளிரான இரவாக நேற்று அமைந்துள்ளது. 

News image

ஜம்முவில் மிகக் குளிரான இரவு; வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸாகப் பதிவு

Updated On :18 டிசம்பர் 2020, 8:48 am


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மிகவும் குளிரான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஜம்முவில் இந்த ஆண்டின் மிகவும் குளிரான இரவாக நேற்று அமைந்துள்ளது. அங்கு 2.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது.

டிராஸ் நகரின் உறைநிலை மிகவும் குறைந்து மைனஸ் 28.5 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் வரும் 21, 22-ஆம் தேதிகளில் மிதமான மழை அல்லது பனிமழை பெய்யக் கூடும். தற்போதைய குளிர்நிலை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31-ஆம் தேதி வரை பெரிய அளவில் பனிமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.