ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜிநாமா: கட்சிக் கூட்டத்திற்கு மம்தா அழைப்பு

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ததையடுத்து இன்று கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது. 

News image
முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :18 டிசம்பர் 2020, 8:03 am

DIN

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ததை சூழ்நிலையில் இன்று கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது. 

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் மோதல் இருப்பது சாதாரணமானதுதான். ஆனால், கடந்த இரு தினங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளது மம்தா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

பந்தபேஷ்வர் தொகுதி எம்.எல்.ஏ ஜிதேந்திர திவாரி, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரி, இன்று பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா என கடந்த இரு தினங்களில் மூன்று பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. 

இந்த சூழ்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மம்தா பானர்ஜி, கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.