ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்: அதிகாரிகள் ஆலோசனை

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: அதிகாரிகள் ஆலோசனை (கோப்புப்படம்)
Updated On :18 டிசம்பர் 2020, 1:01 pm

DIN


மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு முதல்பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆட்சியைக் கைப்பற்ற வியூகங்களை அமைக்கும் விதமாக பாஜக தலைவர்கள் மேற்குவங்கத்திற்கு அடிக்கடி சென்றுவருகின்றனர்.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகின்றனர். இதனைக் கண்டித்து திரிணமூல் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆரிப் அஃதாப் தலைமையில் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சிலிகுரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுத்தேர்தல் நடத்துவதற்கான தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.