ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தில்லியில் தொழிற்சாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

தில்லியில் தொழிற்சாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 

News image
கோப்புப்படம்.
Updated On :19 டிசம்பர் 2020, 11:06 am

DIN

தில்லியில் தொழிற்சாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 
தில்லி விஷ்ணு கார்டன் பகுதியில் மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் தொழிற்சாலையின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணி ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கினர். 
உடனே இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுக்குழுவினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 4 பேர் இறந்தனர். மற்ற இருவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
அதிக பாரம் காரணமாக கட்டடத்தின் மேற்கூரை இடிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.