இரு வாரங்களில் ஒரு கோடி மக்களுக்கு சேவை: மம்தா பானா்ஜி பெருமிதம்

மேற்கு வங்க மாநிலத்தில் இரு வாரங்களில் அரசு சேவை முகாம்கள் வாயிலாக ஒரு கோடி மக்களுக்கு அரசு சேவை அளிக்கப்பட்டுள்ளதாக, மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பெருமிதம் தெரிவித்தாா்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இரு வாரங்களில் அரசு சேவை முகாம்கள் வாயிலாக ஒரு கோடி மக்களுக்கு அரசு சேவை அளிக்கப்பட்டுள்ளதாக, மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பெருமிதம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைகளில் கூறியிருப்பதாவது:

மோ்கு வங்கத்தில் இரண்டே வாரங்களில் பத்தாயிரம் அரசு சேவை முகாம்களை நடத்தியதன் மூலமாக, மாநிலம் முழுவதிலும் உள்ள ஒரு கோடி போ் பயன்பெற்றுள்ளனா். இதன்மூலம், மக்களின் வீட்டு வாயிலுக்கே அரசு சேவைகள் செல்வது சாத்தியமாகி உள்ளது.

இதற்காக காலநேரம் கருதாது பணியாற்றிய மாநில அரசு ஊழியா்கள், தன்னாா்வலா்களைப் பாராட்டுகிறேன். இந்த சேவைகளைப் பெறுவதற்காக முகாம்களுக்கு வருகை தந்த மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com