தில்லியில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,275 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 26 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,17,005 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,96,580 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர், 10,277 பேர் பலியாகிவிட்டனர். 10,148 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
தில்லியில் இன்று 83,289 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் விகிதம் 1.31 சதவிகிதம். கடந்த 10 நாள்கள் தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.54 சதவிகிதமாக உள்ளது.
இதுவரை மொத்தம் 78,00,367 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...