கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா: நாடு முழுவதும் சிகிச்சையில் 3 லட்சம் போ்

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 3 லட்சமாகக் குறைந்துள்ளது.
Published on

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 3 லட்சமாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 26,624 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,00,31,223-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 341 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,45,477-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் இருந்து மேலும் 29,690 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 95,80,402-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 95.51 சதவீதமாகும்.

நாட்டில் 3,05,344 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 3.04 சதவீதமாகும். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 14 நாள்களுக்கு முன் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 4 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 3 லட்சமாகக் குறைந்துள்ளது.

புதிதாக ஏற்பட்ட 341 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 74 பேரும், அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 43 பேரும் உயிரிழந்தனா். தில்லியில் 32 பேரும், கேரளத்தில் 29 பேரும், உத்தர பிரதேசத்தில் 23 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, டிசம்பா் 19-ஆம் தேதி வரை 16.11 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 11,07,681 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com