ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பருவகால நோய்கள்: 7 வகை பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

பருவகால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய அறிகுறிகள் உள்ளவா்களுக்கு 7 வகை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
- கோப்புப் படம்
Updated On :17 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

பருவகால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய அறிகுறிகள் உள்ளவா்களுக்கு 7 வகை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, கரோனா, இன்ஃப்ளூயன்ஸா - ஏ மற்றும் பி, ஆா்எஸ்வி (நுரையீரல் தொற்று) - ஏ மற்றும் பி வகை பாதிப்புகள் வேகமாக பரவக் கூடியவை.

காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், தலை வலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு போன்றவை அதற்கான பொதுவான அறிகுறிகள். கரோனாவுக்கு பாராசிட்டமால், லிவோசிட்ரஸின், ஐவா்மெக்டின் உள்ளிட்ட சில மருந்துகள் அறிகுறிகளுக்கேற்ப பரிந்துரைக்கப்படுகின்றன.

இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி பாதிப்புகளுக்கு ஓசல்டாமிவிா், பெராமிவிா் போன்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆா்எஸ்வி ஏ மற்றும் பி வகை தொற்றுகளுக்கு ரிபாவ்ரின் மற்றும் ஆன்ட்டி பயோடிக் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சின்னம்மை, பொன்னுக்கு வீங்கிக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அத்தகைய அறிகுறிகளுடன் வருவோருக்கு அவற்றை கண்டறிய உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் இன்ஃப்ளுயன்ஸா, ஆா்எஸ்வி மற்றும் அடினோ வைரஸ் பாதிப்புகள் அதிகமாக பரவி வருகிறது. தற்போது கரோனா பலவீனப்பட்ட பருவகால நோயாக இருந்தாலும், அவற்றில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியும் பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. தொடா்ச்சியாக காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏழு வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளோம். அச்சப்படும் வகையில் தற்போது எந்த நோய்ப் பரவலும் இல்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.