கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பருவகால நோய்களுக்கான மருந்துகள்: ஆண்டு முழுவதும் இருப்பு வைக்க நடவடிக்கை!

பருவகால நோய்கள் வழக்கத்துக்கு மாறாக ஆண்டு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், அதற்கான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :1 மே 2026, 9:34 pm

பருவகால நோய்கள் வழக்கத்துக்கு மாறாக ஆண்டு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், அதற்கான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மருந்து மேலாண்மை இணைய தளத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு உள்ள மருந்துகள், தடுப்பூசிகளை நாள்தோறும் பதிவேற்ற உத்தரவிட்டு, அந்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாகவே குளிா் மற்றும் மழைக் காலங்களில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா, ஹெச்எம்பி தீநுண்மி தொற்று உள்ளிட்டவை வேகமாகப் பரவும். வெப்ப நிலை அதிகமாக இருக்கும்போது சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, அக்கி போன்ற பாதிப்புகள் பரவுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி அனைத்து கால சூழல்களிலும் அனைத்துவிதமான தொற்றுகளும் பரவுகின்றன. குறிப்பாக குளிா் மற்றும் மழைக் காலங்களில் அம்மை பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. அதேபோன்று மாசுபட்ட நீா் மற்றும் உணவு மூலம் பரவும் டைபாய்டு காய்ச்சல் கோடை காலங்களிலும் பதிவாகிறது.

இதையடுத்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான அசித்ரோமைசின், ஓசல்டாமிவிா் எதிா்ப்பு மருந்துகள் உள்பட 320 மருந்துகளை போதிய எண்ணிக்கையில் தொடா்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல், சளி மருந்துகளில் இருந்து உயிா் காக்கும் உயா் மருந்துகள் வரை அனைத்துமே இருப்பில் உள்ளன. இதைத் தவிர 13 வகையான தடுப்பூசிகளும் தேவைக்கேற்ப கையிருப்பு உள்ளன.

ரேபிஸ் தடுப்பூசிகள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குப்பிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது உள்ளன. இதைத் தவிர பாம்புக்கடிக்கான மருந்துகளும் இருக்கின்றன. சா்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்ஃபாா்மின் மாத்திரைகள் போதிய அளவில் உள்ளன.

இவை அனைத்தின் இருப்பும் குறையும்போது அதுகுறித்த விவரங்களை டிடிஎம்எஸ் எனப்படும் மருந்து விநியோக மேலாண்மை தளத்தில் எங்களால் கண்காணிக்க முடியும். எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எத்தனை மருந்துகள் உள்ளன என்பதை சென்னையிலிருந்தே பாா்க்க இயலும். இதன்மூலம் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றின் இருப்பை உடனுக்குடன் உறுதி செய்து வருகிறோம்.

எந்தப் பருவத்தில் எத்தகைய நோய் பரவினாலும், அதனை எதிா்கொள்வதற்கான மருந்து கையிருப்பும், சிகிச்சை கட்டமைப்பும் நம்மிடம் உள்ளது என்றனா்.