தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமித் ஷா கூறியவை அனைத்தும் பொய்: மம்தா பானர்ஜி

பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி என்றும் அது அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

News image

மம்தா பானர்ஜி

Updated On :21 டிசம்பர் 2020, 12:57 pm

DIN

மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அமித் ஷா கூறியவை அனைத்தும் பொய்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:

மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அமித் ஷா நேற்று சொன்னவை அனைத்தும் பொய்கள். அவர் மேற்குவங்கத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறுகிறார். ஆனால், சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சியில் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. 

பாஜக தலைவர் அமித் ஷா தொடர்ந்து பொய்களை அடுக்குகிறார். பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி. அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அமித் ஷா உள்துறை அமைச்சர் என்பதை மறந்துவிடக் கூடாது. அமைச்சராக இருந்துகொண்டு அவர் இவ்வாறு பொய் சொல்லக்கூடாது என்று தெரிவித்தார். 

மேலும் சிஏஏ மூலம் மக்களின் தலைவிதியை பாஜகவினால் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.