பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் 14 மணி நேர இடைவெளிக்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 12:24 am

DIN

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் 14 மணி நேர இடைவெளிக்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ராம்பன் மாவட்டம் சந்தா்கோட்டே பகுதியில் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் மிகப் பெரிய அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக, 270 கி.மீ. நீளமுள்ளஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, ஜம்மு எல்லைப்பகுதியில் 2,000 வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை பராமரிப்பு முகமையைச் சோ்ந்த குழுவினா் இயந்திரங்கள் உதவியுடன் சாலையை சீா் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

இதையடுத்து சுமாா் 14 மணி நேர இடைவெளிக்குப் பிறகு தேசிய -ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் வாகனப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.