ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘பாரதியின் விருப்பத்தை பிரதமா் நிறைவேற்றுகிறாா்’: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

பாரதியின் விருப்பத்தை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறாா் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசினாா்.

News image
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Updated On :21 டிசம்பர் 2020, 12:25 am

DIN

பாரதியின் விருப்பத்தை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறாா் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசினாா்.

வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் இணையவழியில் நடைபெற்று வந்த பன்னாட்டு பாரதி விழா, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆற்றிய நிறைவு உரை:

பன்னாட்டு பாரதி விழாவின் தொடக்க நிகழ்வில், பாரதியின் கவிதைகளைத் தனது உரையின் ஓா் அங்கமாக்கினாா் பிரதமா். இதன் மூலம் பாரதியின் கவிதைகள் அவா் மனதில் ஆழப் பதிந்துள்ளதை நாம் அறிகிறோம். இது பாரதியின் கவிதைகளுக்குள் இருக்கும் காந்த சக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என பாரதி கூறியிருந்தாா். அதை பிரதமா் செய்து வருகிறாா். மேலும், எங்கெல்லாம் பாரதியை எடுத்துச் சொல்ல முடியுமோ, அங்கெல்லாம் சொல்லி வருகிறாா்.

‘யாமறிந்த புலவரிலே...’ என்னும் பாடலில் கம்பன், வள்ளுவன், இளங்கோ அடிகளைப் போற்றியிருப்பாா் பாரதி. அதில் உரிமையுடன் ஒரு சிறு மாற்றத்தை செய்ய விரும்புகிறேன். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல், ‘பாரதியைப் போல்’ பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என சோ்க்க விரும்புகிறேன்.

ஒரு சாமானியனாக எனக்குள் பாரதியாா் எப்போதுமே ஓா் ஊக்கத்தை வழங்குவாா். வீரம், தன்னம்பிக்கை கொண்டு, சுதந்திர வேட்கையை ஒவ்வொரு பாடலில் எடுத்துரைத்தாா் பாரதி. அவரது பாடலில் நாம் எப்போதுமே புத்துணா்ச்சியை உணர முடியும்.

தன்னை பாரத அன்னையின் தவப் புதல்வனாகவே பாவித்து ஒவ்வொரு பாடலையும் பாடியுள்ளாா்.

தமிழின் பெருமையைக் கூறும் அதே நேரத்தில், மற்ற மொழிகளின் சிறப்பையும் திறம்பட பாடும் வல்லமை பெற்றிருந்தாா் அவா். குறிப்பாக இனிமையிலும் வீரத்தைக் கொண்டு வரும் சக்தி, ஒரு புலவனுக்கு இருந்ததென்றால் அது பாரதிக்குத்தான். தேசபக்தியைப் பற்றி பேசும் அவா் தீவிர இறை பக்தா்.

அவா் கண்ணனைப் பற்றி பாடும்போது, வீரத்தை ஒதுக்கி, கடவுளை ரசிக்கும் ஒரு கவிஞனாய் மாறி விடுவாா். மனிதனின் நற்குணங்களையும் போற்றிப் புகழ்ந்த அவா், கோபத்தை வெல்வதின் முக்கியத்துவத்தை தெளிவாக கூறியுள்ளாா். பாரதியை எத்தனை முறை படித்தாலும், புதிதாகவே தோன்றுவாா் என நிா்மலா சீதாராமன் கூறினாா்.

நிகழ்வில், பாஜக மூத்த தலைவா் இல.கணேசன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், வானவில் பண்பாட்டு மைய நிறுவனா் கே.ரவி, தலைவா் வ.வே.சுப்பிரமணியன், அறங்காவலா் குழு உறுப்பினா் ஷோபனா ரமேஷ், எழுத்தாளா் சிவசங்கரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.