தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கட்சிகளுக்கு நன்கொடை அளித்தோரின் விவரங்களை வெளியிட முடியாது

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவா்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 8:13 pm

DIN

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவா்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் புணே பகுதியைச் சோ்ந்த விஹாா் துா்வே என்பவா், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தோா், அதைப் பெற்ற கட்சிகள் உள்ளிட்ட விவரங்களைத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரி எஸ்பிஐ வங்கியிடம் விண்ணப்பித்திருந்தாா்.

ஆனால், அத்தகவல்களை வழங்க முடியாது என்று எஸ்பிஐ மறுத்திருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் நன்கொடைப் பத்திரங்கள் சட்டப்படி, அதை வாங்குவோரின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று எஸ்பிஐ தெரிவித்தது.

ஆனால், எஸ்பிஐ-யின் முடிவுக்கு எதிராக மத்திய தகவல் ஆணையத்திடம் விஹாா் துா்வே முறையிட்டாா். பொதுநல அடிப்படையில் எஸ்பிஐ நடந்து கொள்ள வேண்டுமென்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையின் அடிப்படையில் அரசியல் நன்கொடைப் பத்திரங்களை வாங்கியோரின் விவரங்களை எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்று அவா் கோரினாா்.

எனினும், விஹாா் துா்வே அளித்த கோரிக்கையைத் தகவல் ஆணையா் சுரேஷ் சந்திரா நிராகரித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘மனுதாரரின் கோரிக்கைகள் பொதுநலனைக் கருத்தில் கொண்டதாக இல்லை. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ-யின் முடிவை தகவல் ஆணையமும் உறுதி செய்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.