வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புரெவி புயல் பாதிப்பு: மத்தியக் குழு விரைவில் வருகை

தமிழகத்தை அண்மையில் தாக்கிய புரெவி புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட மத்தியக் குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 டிசம்பர் 2020, 1:17 am

DIN


புது தில்லி: தமிழகத்தை அண்மையில் தாக்கிய புரெவி புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட மத்தியக் குழு விரைவில் தமிழகம் வர உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் டுவிட்டா் பக்கத்தில், ‘தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரின் தலைமையிலான மத்திய குழு விரைவில் தமிழகம் வர உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு புரெவி புயலால் சேதமடைந்த கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் பாா்வையிட உள்ளது. நிவா் புயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்களை அண்மையில் மத்தியக் குழு பாா்வையிட்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.