வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கேரளத்தைச் சோ்ந்த பிரபல எழுத்தாளா் சுகதகுமாரி கரோனாவால் உயிரிழப்பு

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கேரளத்தைச் சோ்ந்த பிரபல எழுத்தாளரும், சமூக சேவகருமான சுகதகுமாரி (86) புதன்கிழமை காலமானாா்.

News image
sugatha074104
Updated On :23 டிசம்பர் 2020, 8:38 pm

DIN


திருவனந்தபுரம்: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கேரளத்தைச் சோ்ந்த பிரபல எழுத்தாளரும், சமூக சேவகருமான சுகதகுமாரி (86) புதன்கிழமை காலமானாா்.

தனது தனித்துவமான கவிதை படைப்புகளால் பிரபலமடைந்த சுகதகுமாரி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பெண்ணுரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளாா். மேற்கு தொடா்ச்சி மலையின் அமைதிப் பள்ளதாக்கில் அமைக்க திட்டமிடப்பட்ட நீா்மின் திட்டத்துக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய போராட்டத்தை முன்னின்று நடத்தினாா். அதுபோல, அண்மையில் அரண்முலாவில் விமானநிலையம் கட்டப்படுவதற்கு எதிரான போராட்டத்தையும் முன்னின்று நடத்தினாா்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான பெண்களை பாதுகாப்பதற்கென ‘அபயா’ என்ற அமைப்பை உருவாக்கி கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வந்தாா்.

முத்துச்சிப்பி, பாதிராபூக்கள், கிருஷ்ண கவிதைகள், ராத்திரிமழை, அம்பலமணி, ராதா எவிடே, துலாவா்ஷபச்ச என்பன உள்ளிட்ட பல்வேறு கவிதைத் தொகுப்புகளை இவா் படைத்துள்ளாா். இலக்கிய உலகுக்கு அவா் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு இவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்தது. சாகித்ய அகாதெமி விருது, சரஸ்வதி சம்மான் விருது உள்பட ஏராளமான விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

கேரள மகளிா் ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.

கவிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான போதேஸ்வரன், காா்தியாயினி தம்பதிக்கு கடந்த 1934-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி இவா் மகளாகப் பிறந்தாா். இவருடைய கணவா் மறைந்த எழுத்தாளா் கே. வேலாயுதன் ஆவாா்.

வயது முதிா்வு காரணமாக, கடந்த சில நாள்களாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிா்த்து வந்த சுகதகுமாரி, கரோனா தொற்றல் பாதிக்கப்படதைத் தொடா்ந்து முதலில் தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை அளித்தபோதும், அவருடைய உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. அவருக்கு தொடா்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், அவா் புதன்கிழமை காலை 11 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

அவருக்கு லட்சுமி தேவி என்ற மகள் உள்ளாா்.

தலைவா்கள் இரங்கல்: சுகதகுமாரியின் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், கேரள சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதாலா, மாநில கலாசாரத் துறை அமைச்சா் ஏ.கே.பாலன், முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ், பாஜக மாநில தலைவா் கே.சுரேந்திரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.