சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

'சிறப்புப் பேரவைக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை: கேரள முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான சிறப்புப் பேரவைக்கூட்டத்திற்கு கோரப்பட்ட அனுமதியை நிராகரிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News image
வேளாண் சட்டங்களுக்கு எதிரான சிறப்புக் கூட்டத்திற்கு அனுமதி இல்லை: கேரள முதல்வருக்கு ஆளுநர் கடிதம்
Updated On :23 டிசம்பர் 2020, 1:17 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான சிறப்புப் பேரவைக்கூட்டத்திற்கு கோரப்பட்ட அனுமதியை நிராகரிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 28 நாள்களாக தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகளின் ஆதரவளித்து வரும் பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது மாநில சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளத்தில் ஆளும் இடது முன்னணி அரசின் சார்பில் வேளாண் சட்டங்களைக் குறித்து விவாதிப்பதற்காக டிசம்பர் 23ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் பினராயி விஜயன் ஆளுநர் ஆரிஃப் முகமதுகானிடம் அனுமதி கோரியிருந்தார்.

எனினும் முதல்வர் பினராயி விஜயனின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு கடிதம் எழுதிய முதல்வர் பினராயி விஜயன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் அமைச்சரவையின் கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில் சட்டமன்றத்தை குறுகிய கால அறிவிப்பில் கூட்டுவது குறித்த எனது அடிப்படை கேள்விக்கு பதிலளிக்காததால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.