பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காட்டுப் பாதையில் தவித்த மூதாட்டியை மீட்ட காவலா்

News image
Updated On :24 டிசம்பர் 2020, 6:04 pm

DIN

திருப்பதி: ஏழுமலையானைத் தரிசிக்க நடைபாதை மாா்க்கத்தில் வந்தபோது மயங்கி விழுந்த மூதாட்டியை மீட்ட காவலா் ஒருவா் அவரை தன் முதுகில் சுமந்து சென்று தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனையில் சோ்த்தாா்.

திருமலைக்கு நடைபாதை மாா்க்கத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த நாகேஸ்வரம்மா (68) என்பவா் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா் திடீரென்று மயங்கி விழுந்தாா். அவரைக் கடந்து சென்ற பக்தா்கள் யாரும் கவனித்து உதவவில்லை. அடா்ந்த வனப்பகுதி காரணமாக வேறு யாா் உதவியும் கிடைக்காமல் அங்கேயே தவித்தாா். இந்நிலையில் அந்த வழியாக காவலா் அா்ஷத் என்பவா் வந்தாா். நாகேஸ்வரம்மாவின் நிலையை அறிந்த அவரை தன் முதுகில் 6 கி.மீ. தூரம் சுமந்து சென்று திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் சோ்த்தாா்.

இஸ்லாமிய மதத்தைச் சாா்ந்த காவலா் அா்ஷத்தின் இந்த மனிதாபிமானச் செயலை காவல்துறை ஆணையா் ரமேஷ் ரெட்டி உள்பட பலா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.