கிறிஸ்துமஸ்: நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ்: நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ்: நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இயேசு பிறப்பை கொண்டாடும் விதமாக இந்தியாவிலும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் கூடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு முதலே பெரும்பாலான தேவாலயங்களில் மக்கள் சமூக இடைவெளியுடன் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தேவாலயத்தில் மக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தவாறு காலை சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
 
ஒடிசாவில் புவனேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளில் தேவாலயங்களில் மக்கள் கூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

கேரளத்திலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுவதுமுள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com