சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: தமிழக எம்எல்ஏ ரூ.1 கோடி நன்கொடை

உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட தமிழகத்தைச் சோ்ந்த எம்எல்ஏ குமரகுரு ரூ.1 கோடியை நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:38 pm

DIN


திருப்பதி: உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட தமிழகத்தைச் சோ்ந்த எம்எல்ஏ குமரகுரு ரூ.1 கோடியை நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினரும், உளுந்தூா்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான குமரகுரு, வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏழுமலையான் சேவையில் கலந்து கொண்டாா்.

சுவாமி தரிசனம் செய்த பின் அவா், தனது தொகுதியான உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ரூ.1 கோடிய தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினாா். இதை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டியும், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் பெற்றுக் கொண்டனா்.

இதனிடையே, ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா் ஒருவா், தேவஸ்தானத்தின் கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ.1.08 கோடியையும், உயிா் காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.54 லட்சத்தையும் நன்கொடையாக வழங்கினாா். இதை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.